Sunday, April 28, 2013

மணி நேரத்துக்கு 2500 தேங்காய் உரிக்கும் இயந்திரம்



இரு தமிழர்களின் சாதனை !

ஒரு மணி நேரத்துக்கு 2500 தேங்காய் உரிக்கும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு ...


சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காதர், ஜமால் ஆகிய இளைஞர்கள் ஒரு மணி நேரத்தில் 2500 தேங்காய் உரிக்கும் புதிய இயந்திரத்தைக் கண்டு பிடித்துள்ளனர். அதிசயம் - ஆனால் உண்மை.

சிவகங்கை மாவட்டம், கீலவெல் லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காதர் (32). இவர் எம்.பி.ஏ மற்றும் எம்எஸ் (அய்டி) படித்தவர். அமெரிக்காவில் கடந்த 13 ஆண்டுகளாக தனியார் அய்டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். எண்ணெய் ஆலைகளுக்கு தேங்காய் விநியோகம் செய்வது, இவரது குடும்ப தொழிலாக இருந்து வருகிறது. தேங்காய் உரிக்க போது மான ஆட்கள் இல்லாததால், ஆலை களுக்கு போதுமான தேங்காய்களை விநியோகம் செய்ய முடியவில்லை. இந்த பிரச்சினையை சமாளிக்கும் வகையில், புதிய கருவியை கண்டு பிடிக்க காதர் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். பின்னர், அவருடன் சேர்ந்து 4 பேர் கொண்ட குழு, இந்த கருவியை வடிவமைத்துள்ளது.

ஆலைகளுக்கு தேங்காய் சப்ளை செய்வது, எங்களின் குடும்ப தொழி லாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் ஆட்கள் பற்றாக்குறை இல்லாமல் இருந்தது. தற்போது, ஆட்கள் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. இதனால், எங்களின் தொழில் பெரிதும் பாதிக் கப்படுகிறது. எங்களை போல் ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலைகள் கேட்கும் அளவுக்கு உடனடியாக தேங்காய் களை உரித்து அனுப்ப முடியவில்லை. இதற்காக, புதிய கருவியை கண்டுபிடிக்க வேண் டுமென திட்டமிட்டு இருந்தேன்.

அப்போதுதான், இணையதளம் மூலம் நாமக்கல் மாவட் டத்தில் பட்டறை நடத்தி வரும் ஜெகன் என்பவரின் நட்பு கிடைத்தது. பயனுள்ள தொழில்நுட்பங்கள் பற்றி அடிக்கடி இணையதளம் மூலம் பேசுவோம். 3 மாதங்களாக புதிய கருவி கண்டுபிடிப்பு பற்றி ஆலோ சனை நடத்தினோம். ஜெகன், ஜமால், ஷேக், சேட் ஆகிய 4 பேருடன் நானும் சேர்ந்து, இந்த புதிய கருவியை 2 மாதத்தில் வடிவமைத்தோம். இதற்காக, மொத்தம் ரூ.8 லட்சம் செல விட்டுள்ளோம். ஒரு மணி நேரத்துக்கு 2,000 முதல் 2,500 தேங்காய்களை உரிக்க முடியும். பயிற்சி பெற்ற தொழி லாளி ஒரு மணி நேரத்துக்கு 200 தேங்காய் மட்டுமே உரிக்க முடியும்.

தற்போது 1,000 தேங்காய் உரிக்கும்போது 5 தேங்காய் உடைகிறது. தேங்காய் உடைவதை தடுக்க சில மாற்றங்கள் செய்ய திட்டமிட்டுள் ளோம். மேலும், நமக்கு தேவையான போது, குடுமியுடனும் தேங்காய் உரிக்க முடியும். இந்த புதிய இயந்திரத்தை இயக்கவும், கண் காணிக்கவும் ஒரு தொழிலாளர் மட்டுமே போதுமானது. எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு தடையின்றி தேங்காய் தர முடியும். தேங்காய் ஏற்றுமதி பாதிக்காது. தேங்காய் நார் உற்பத்தியும் எளிமையாகி விடும். இதைத்தொடர்ந்து, தேய்காய் கழிவுகளை கொண்டு பயோ காஸ் மூலம் மின்சாரம் தயாரிக்க திட்ட மிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

via இன்று ஒரு தகவல்

No comments:

Post a Comment